படித்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் முகநூலில் (Facebook) கூட சாதி மேடை போட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது மிகவும் ஒரு வேதனையான விடயம். அதிலும் சாதிகளுக்கெனப் பல முகநூல் பக்கங்கள் காளான்கள் போல் முளைப்பதைப் பார்த்தால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ எனும் ஐயம் எழுகிறது. அந்த சாதியப் பக்கங்கள் தேவையா எனக் கேட்கும் வண்ணம் இந்த வெண்பாவை வடித்திருக்கிறேன்.
முகநூலிலும் சாதியா?
யாருப்பா சாதிகளி ரண்டுதான் என்றது
பாருப்பா சாதிகளின் பக்கங்கள் எவ்வளவு
ஏனப்பா எல்லாம் தெரிஞ்சும் முகநூலில்?
வீணப்பா இத்தனை சாதிய பக்கங்கள்
முன்நோக்கி சென்றிடும் நம்மினத்தை, சாதிப்பேய்
பின்நோக்கி தள்ளிடுமே, பொல்லாத பேயது!
பற்றுதலாய் அப்பேயைப் போற்றியே காத்திட்டால்
கற்றதனா லென்ன பயன்?
No comments:
Post a Comment