ஆண்டொன்று போனால் வயதொன்று போகுமென்பார்
நீண்டிடும் வாழ்க்கையினில் பட்டறிவும் நீளுமென்பேன்
வேண்டினேன் நல்லமனம் உள்ளவர்கள் நட்பதனை
வேண்டாமே வாழ்வினில் சூது
Monday, April 30, 2012
முகநூலிலும் சாதியா?
படித்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் முகநூலில் (Facebook) கூட சாதி மேடை போட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது மிகவும் ஒரு வேதனையான விடயம். அதிலும் சாதிகளுக்கெனப் பல முகநூல் பக்கங்கள் காளான்கள் போல் முளைப்பதைப் பார்த்தால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ எனும் ஐயம் எழுகிறது. அந்த சாதியப் பக்கங்கள் தேவையா எனக் கேட்கும் வண்ணம் இந்த வெண்பாவை வடித்திருக்கிறேன்.
முகநூலிலும் சாதியா?
யாருப்பா சாதிகளி ரண்டுதான் என்றது
பாருப்பா சாதிகளின் பக்கங்கள் எவ்வளவு
ஏனப்பா எல்லாம் தெரிஞ்சும் முகநூலில்?
வீணப்பா இத்தனை சாதிய பக்கங்கள்
முன்நோக்கி சென்றிடும் நம்மினத்தை, சாதிப்பேய்
பின்நோக்கி தள்ளிடுமே, பொல்லாத பேயது!
பற்றுதலாய் அப்பேயைப் போற்றியே காத்திட்டால்
கற்றதனா லென்ன பயன்?
முகநூலிலும் சாதியா?
யாருப்பா சாதிகளி ரண்டுதான் என்றது
பாருப்பா சாதிகளின் பக்கங்கள் எவ்வளவு
ஏனப்பா எல்லாம் தெரிஞ்சும் முகநூலில்?
வீணப்பா இத்தனை சாதிய பக்கங்கள்
முன்நோக்கி சென்றிடும் நம்மினத்தை, சாதிப்பேய்
பின்நோக்கி தள்ளிடுமே, பொல்லாத பேயது!
பற்றுதலாய் அப்பேயைப் போற்றியே காத்திட்டால்
கற்றதனா லென்ன பயன்?
Friday, April 27, 2012
சச்சினின் புது ஆட்டம்
பதிப்பு - 1
சச்சின வர்க்ரிக்கெ ட்டில்சாத னையாட்டம்
நச்சென ஆடுவாரா மேல்சபையி லாட்டம்
எடுப்பாரா கூட்டத்தில் மக்களவர் வாட்டம்
தடுப்பாட்டம் வேண்டா மது
பதிப்பு - 2
சச்சினவர் க்ரிக்கெட்டின் சாதனை யுச்சியில்
நச்சென ஆடுவாரா மேல்சபையி லாட்டம்
எடுப்பாரா கூட்டத்தில் மக்களவர் வாட்டம்
தடுப்பாட்டம் வேண்டா மது
பதிப்பு - 3
சச்சினவர் க்ரிக்கெட்டின் எட்டாத சாதனை
உச்சத்தில் சென்றாலும் கேட்பார்நல் போதனை
ஆட்டமுண்டு மேல்சபையின் கூட்டத் தினில்
வாட்டமது வேண்டாம் இனி
பதிப்பு - 4
சச்சின வர்க்ரிக்கெ ட்டில்சாத னையாட்டம்
நச்சென ஆடுவாரா மேல்சபையில் நல்லாட்டம்
வேண்டும் அடித்தாடும் வேங்கைபோல் துள்ளாட்டம்
வேண்டாம் தடுப்பாட் டமது
பதிப்பு - 5
சச்சினவர் க்ரிக்கெட்டின் சாதனை யுச்சியில்
நச்சென ஆடுவாரா மேல்சபையில் நல்லாட்டம்
வேண்டுமே வேதனை தீர்க்கும்நல் வேகமது
வேண்டாம் தடுப்பாட் டமது
Thursday, April 26, 2012
தமிழ்த்தேன்
தமிழ் கற்கவா வெந்தன் முகநூல்
இமிழ்குரல் கேட்டு இணைந்துவி ட்டால்
உமிழ்நீர் ஒழுகத் தமிழ்த்தேன் பருக
அமிழ்வோம் தமிழ்க்க டலுள்
இமிழ்குரல் கேட்டு இணைந்துவி ட்டால்
உமிழ்நீர் ஒழுகத் தமிழ்த்தேன் பருக
அமிழ்வோம் தமிழ்க்க டலுள்
Wednesday, April 25, 2012
தமிழின மீட்சி
முன்னுரை
உலகத்தையே ஆண்ட தமிழினம் இன்று உலகில் பல் வேறு இடத்தில் சிதறித் தமிழின உணர்வை இழந்திட்டதோ என்று ஐயுற்றதால் விளைந்த வெண்பா இது. இந்த வெண்பா ஒரு விகற்ப பஃறொடை வெண்பா வாகும்.
தமிழின மீட்சி
திரைகட லோடி திரவியந் தேடி
தரைகட லெல்லாம் தமிழனின் ஆட்சி
புரையுந ரின்றே திகழ்ந்தது மாட்சி
புரைகொ ண்டயினம் புரண்டிட்ட வீழ்ச்சி
புரையோடிப் போயினும் பெற்றிடுமா மீட்சி
கரையேறும் காலம் எது
அருஞ்சொற்பொருள்
புரையுநர் - ஒப்பவர் (rivals, equals)
புரை - பெருமை
புரையோடி - infected புரையோடிய புண் என்பார்கள்.
விளக்கம்
விகற்பம் = எதுகை வகை (variety). எதுகையென்பது அடியின் முதலில் வரும் சீர்களின் இரண்டாவது எழுத்துப் பொருந்தி வருவதைக் குறிக்கும். அதே நேரத்தில் முதல் எழுத்து ஒலியளவில் (மாத்திரை) ஒத்திருக்க வேண்டும். எ.கா. பதுமை, புதுமை. ஆனால், மெட்டு, போட்டு இவ்விரண்டும் எதுகை ஆகாது. மெ - குறில், போ - நெடில் - ஆகவே ஒலியளவு மாறுபடும்.
பஃறொடை - பல தொடை. தொடை என்றால் இரண்டு அடிகள் எனப் பொருள். வெண்பா என்று பொதுவாகச் சொன்னால் அதில் நான்கு அடிகள் இருக்க வேண்டும். 5-லிருந்து 12 அடிகள் வரையில் அமையும் பாக்கள் பஃறொடை வெண்பாவாகும்.
மேலே நானெழுதிய “தமிழின மீட்சி” என்ற பா, நான்குக்கு மேற்பட்ட அடிகளையும் (6 அடிகள்), எல்லா அடிகளிலும் ஒரே எதுகை (ரை)யும் பெற்று வருவதால் அது ஒரு விகற்ப பஃறொடை வெண்பாவாகிறது.
Tuesday, April 24, 2012
வெண்பா ஓசைகள்
இன்றைய வெண்பாக்கள் வெண்பா ஓசைகளை விளக்கும் வண்ணம் அமைத்திருக்கிறேன். ஓசையைக் கணக்கிடும்போது ஈற்றுச் சீரைக் கணக்கில் சேர்க்கக் கூடாது.
1. ஏந்திசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். வெண்சீர் வெண்டளை = காய் முன் நேர்
முன்புகழ்ந்து பின்னிகழ்ந்து துன்பமதைச் செய்திடுவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயலில் தோய்ந்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்
2. தூங்கிசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் இயற்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். இயற்சீர் வெண்டளை = மா முன் நிரை, நிரை (விளம்) முன் மா
புறமது பேசி மனமே மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு
ஓரசைச் சொற்களான பிறர், புறம் ஆகியவை வந்ததால் தளை தட்டிய வெண்பா - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு - 1:
பிறர் துன்புற இன்பம் அடைவார்
புறம் பேசியே நெஞ்சம் மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு
3. ஒழுகிசைச் செப்பலோசை - வெண்பாவில் இயற்சீர் வெண்டளைகளும் வெண்சீர் வெண்டளைகளும் மட்டுமே வர வேண்டும்.
புறம்பேசும் இன்பத்தில் நன்பொழுதைப் போக்குவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயல்தான் செய்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்
1. ஏந்திசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். வெண்சீர் வெண்டளை = காய் முன் நேர்
கண்டு கொள்ளாதே - ஏந்திசைச் செப்பலோசை
துன்பத்தில் தள்ளிநின்று இன்பமதைக் கண்டிடுவார்முன்புகழ்ந்து பின்னிகழ்ந்து துன்பமதைச் செய்திடுவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயலில் தோய்ந்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்
2. தூங்கிசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் இயற்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். இயற்சீர் வெண்டளை = மா முன் நிரை, நிரை (விளம்) முன் மா
கண்டு கொள்ளாதே - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு 2
பிறரது துன்பம் அவர்க்கது இன்பம்புறமது பேசி மனமே மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு
ஓரசைச் சொற்களான பிறர், புறம் ஆகியவை வந்ததால் தளை தட்டிய வெண்பா - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு - 1:
பிறர் துன்புற இன்பம் அடைவார்
புறம் பேசியே நெஞ்சம் மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு
3. ஒழுகிசைச் செப்பலோசை - வெண்பாவில் இயற்சீர் வெண்டளைகளும் வெண்சீர் வெண்டளைகளும் மட்டுமே வர வேண்டும்.
கண்டு கொள்ளாதே
பிறர்காணும் துன்பத்தில் இன்பமதைக் காண்பார்புறம்பேசும் இன்பத்தில் நன்பொழுதைப் போக்குவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயல்தான் செய்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்
Monday, April 23, 2012
சகோதர யுத்தம்
ஈழத்தில் நேர்ந்த இழவுக் குமுகவும்
கீழிறங் கிச்சகோத ரச்சண்டை என்றாரே
நேர்காணல் வைத்தார் இளையவர் ஸ்டாலின்
முழுக்கோணல் ஆக்கினார் அண்ணன் அழகிரி
கண்டோம் சகோதரப் போர்
கீழிறங் கிச்சகோத ரச்சண்டை என்றாரே
நேர்காணல் வைத்தார் இளையவர் ஸ்டாலின்
முழுக்கோணல் ஆக்கினார் அண்ணன் அழகிரி
கண்டோம் சகோதரப் போர்
சகோதரிகள் நாடகம்
உடன்பிற வாசசியை நீக்கி யதும்ஜெ
உடனே அபிமானி கள்போட்டா ர் கள்ஜேஜே
ராசிபலன் பார்த்து நடந்த தொருக்கூத்து
தூசியோ தொண்டர் நிலை
உடனே அபிமானி கள்போட்டா ர் கள்ஜேஜே
ராசிபலன் பார்த்து நடந்த தொருக்கூத்து
தூசியோ தொண்டர் நிலை
Thursday, April 19, 2012
அக்கினி - 5 (பல விகற்ப இன்னிசை வெண்பா)
சீறி யது அக்கினி ஏவுகணை
கூறி யதுலகுக்கு இந்தியத்தி றன்தனை
அச்சுறுத் தல் அருகாமை நாடுகள்தான்
துச்சமினி நாமில்லை காண்
கூறி யதுலகுக்கு இந்தியத்தி றன்தனை
வாலாட்டும் அண்டை அயல் நாடுகளே
துச்சமினி யாமில்லை காண்
கூறி யதுலகுக்கு இந்தியத்தி றன்தனை
அச்சுறுத் தல் அருகாமை நாடுகள்தான்
துச்சமினி நாமில்லை காண்
அக்கினி - 5 - பதிப்பு - 2
சீறி யது அக்கினி ஏவுகணைகூறி யதுலகுக்கு இந்தியத்தி றன்தனை
வாலாட்டும் அண்டை அயல் நாடுகளே
துச்சமினி யாமில்லை காண்
என் முதல் நிலைமண்டில/அடிமறி மண்டில ஆசிரியப்பா
வசந்த்
வசந்தப் பருவ வசந்தமும் நீயே
இளவேனில் கால அழகுவேள் நீயே
துறுதுறு சுட்டிச் சிறுவனும் நீயே
சுறுசுறு ப்பான தேனீயும் நீயே
கோபால் பெற்ற இளவல் நீயே
ஜெனிட்டா சுமந்த ஜனனம் நீயே
வாழ்வில் என்றும் வசந்தம் நீயே
வசந்த் - பிறந்த நாள் வாழ்த்து (பல விகற்ப இன்னிசை வெண்பா)
வசந்தப் பருவ வசந்தமும் நீயே
இளவேனில் கால அழகுவேள் நீயே
துறுதுறு சுட்டிச் சிறுவனும் நீயே
மகிழ்ச்சிதான் என்றும் இனி
இளவேனில் கால அழகுவேள் நீயே
துறுதுறு சுட்டிச் சிறுவனும் நீயே
மகிழ்ச்சிதான் என்றும் இனி
மின்குழு இழைகள் (பல விகற்ப இன்னிசை வெண்பா)
மின்கு ழுவிழைகள் தன்னிலே நான்சிக்க
பன்மடங்கு நேரமும் தான் விரயமாக
எண்ணற்ற மின்மடல்கள் இன்றள வும்தேங்க
கெட்டதே யென்ன லுவல்
Wednesday, April 18, 2012
கண் துடைப்பு
கண் துடைப்பு (பல விகற்ப பஃறொடை வெண்பா)
ஈழம் கிளம்பியது வீணர்கள் கூட்டம்
தமிழினத் தின்மேல் சிறிதுமில்லை நாட்டம்
இலங்கையில் தேநீர் விருந்துகள் கொண்டாட்டம்
தன்மானம் வாழ்வுரிமை மீண்டதென தம்பட்டம்
பொய்யுரைக்கக் கூசாம னம்
Tuesday, April 17, 2012
எது தமிழ்ப்புத்தாண்டு?
எது தமிழ்ப்புத்தாண்டு? (பல விகற்ப பஃறொடை வெண்பா)
தமிழ்ப் புத்தாண்டு சித்திரையோ தையோ
முகவும் ஜெயும் குய்யோ முறையோ
தமிழர்கள் சாதி மதம் விட்டு
தமிழினம் ஒன்றென்று சேர்வார் களோ
புத்தாண்டு அன்றே அது
Friday, April 13, 2012
தேர்வு
தேர்வு
மழலைப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்க்குக் கூட நுழைவுத்தேர்வு இருக்கிறது. ஆனால், நம்மை ஆள்பவர்களுக்கு/ஆளப்போகிறவர்களுக்கு தேர்தலில் நிற்பதற்கு முன்னால் அதற்குத் தகுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு ஏன் ஒரு தேர்வு கூட இல்லை? இந்த ஆதங்கத்தை வெண்பாவாக வடித்தால் என்ன என்று தோன்றியது. இந்தக் கருத்தை சில வகை வெண்பாக்களாக எழுதியிருக்கிறேன்.
ஒரு விகற்ப குறள் வெண்பா
தேர்வெதற்கு பிஞ்சுகள் பள்ளியில் சேர்வதற்குதேர்வின்றே ஆளுவோரைக் கேள்
ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கேதேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்
ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா
தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கேதேர்விலை நம்மையா ள்வோருக்கே-- தீர்வது
கற்றவ ராட்சிசெய் தல்
தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி-- தேர்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கேதேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தேர்வுவேண் டும்தகுதி யுண்டெனச் சொல்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்
வெண்கலிப்பா
தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கேதேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தேர்வுவேண் டும்தகுதி யினைப் பார்ப்பதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்
Subscribe to:
Comments (Atom)