Wednesday, March 28, 2012

நன்றி வெண்பா

நன்றி வெண்பா - பல விகற்ப பஃறொடை வெண்பா


நன்றாய் அலகிட்டீர் வெண்பா பிடித்ததால்
வென்றாய் மனதை அசைசீர் பிரித்ததால்
இன்றேயென் நன்றியைப் பாவில் வடித்தேனே
என்றுயாப்பு என்கையில் கிட்டும், துடித்தேன்
இலக்கணக் கூறுகள்ஏந் திட்டநின் சொற்கள்
பலக்கணத் தில்எனைம யக்கிடும் தென்னங்கள்
பற்பலப்பாக் கள்நான்வ டிப்பேனே இங்கு
தினம்தினம் பாக்களென் பங்கு

No comments:

Post a Comment