என் குரு திரு. அஷோக் சுப்ரமணியம் அவர்கள் தினமொரு திருக்குறளுக்கு உரையெழுதியும் அதற்கிணையான புதுக்குறளையும் எழுதி வருகிறார்கள். தமிழிலக்கியங்களின்பால் அவர் கொண்டுள்ள பற்றும் அவரின் வெண்பா எழுதும் திறனும் அவரை அறிந்தோர்க்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது இன்றைய குறள்:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
(குறள் 86: விருந்தோம்பல் அதிகாரம்)
அந்தக் குறளையும், அவரின் விளக்கத்தையும் படித்தவுடன் அதற்கிணையான ஒரு புதுக்குறள் எழுதத் தோன்றியது. அந்தக் குறள்:
விருந்தோம்பல் பண்பினைப் பேணுவோர் தாமே
விருந்தினராம் வானோர வர்க்கு
No comments:
Post a Comment