புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012-ல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நான் எழுதிப் பயிற்சியளித்தப் பட்டிமன்றத்தில் இடம் பெற்ற மாநாடு குறித்த வெண்பா, ஹைக்கூ, வசனநடைக் கவிதை இதோ:
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - வெண்பா
புலம்பெயர்ந்தோம் தாய்மண்ணை விட்டுவேறு நாடு
உளம்பெய ரோமுயிர்போ னாலு(ம்)மொழி விட்டு
இளம்தலைமு றைத்தமிழில் இன்புற் றிருக்க
உளம்பூரிக் கத்தமிழ்க் கல்வி வழங்கும்
கலிஃபோர் னியத்தமிழ்ப் பள்ளிக் கனவாம்
ஒளிதருங்கல் விக்கோர்மா நாடு
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - ஹைக்கூ
சொந்தபந்தம் விட்டு வந்தோம் வெளிநாடு
உயிர் விட்டு உடல் வந்தது போல, ஆனால்
எங்கள் உயிராய் தமிழ்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - வசனநடைக் கவிதை (புதுக்கவிதை)
தேடிவந்தோம் திரவியத்தை அயல் நாடு தனில்
கோடி கோடியாய் செல்வம் வந்தாலும் உயிர்
நாடியாய் எங்களுக்கு என்றும் தமிழ்
ஓடிவிளையாடிடும் எங்கள் பிள்ளைகளும்
நாடிவந்து தமிழ் கற்றிடுவார் தமிழ்க் கழகத்திலே
கூடிவந்து நடத்துகிறோம் மாநாடு
பட்டிமன்றத்தின் தலைப்பு “தமிழின் பொற்காலம் கடந்த காலமா? எதிர் காலமா”. தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கலப்பின்றி இந்தப் பட்டிமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் இந்த வெண்பா, ஹைக்கூ, வசன நடைக்கவிதைகளையும் பேசியது மனதுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
No comments:
Post a Comment