உதையும் சதையும் கதையின்றித் தந்தால்
உதைவாங்கி டும்படமே அஃது
Friday, July 20, 2012
Tuesday, July 17, 2012
கபடதாரி கருணாநிதி - 2
பதவியிலி ருந்து உதவாத் தலைவர்
பதவியில்லேல் செய்வார்பா சாங்கு
தமிழினம் வீழ்கையில் பார்த்திட்டத் தாத்தா
தமிழீழம் பெற்றிடுவார் காண்
பதவியில்லேல் செய்வார்பா சாங்கு
தமிழினம் வீழ்கையில் பார்த்திட்டத் தாத்தா
தமிழீழம் பெற்றிடுவார் காண்
Monday, July 16, 2012
கபடதாரி கருணாநிதி
பதவியிலி ருந்து உதவாத் தலைவர்
பதவியி லில்லாமல் நாறிடும் வேளை
உதவிடு வாராம் தமிழீழம் பூக்க
உதைவிடுவார் சோனியா வென்றேப் பதறி
அதைவிடுக்கும் ஈனச்செ யல்புரி ந்திட்ட
கருணை யிலாது நிதியைக் குவிக்கும்
கருணா நிதியை வெறு
பதவியி லில்லாமல் நாறிடும் வேளை
உதவிடு வாராம் தமிழீழம் பூக்க
உதைவிடுவார் சோனியா வென்றேப் பதறி
அதைவிடுக்கும் ஈனச்செ யல்புரி ந்திட்ட
கருணை யிலாது நிதியைக் குவிக்கும்
கருணா நிதியை வெறு
பசி போக்கல் - புதுக்குறள்
ஈகை அதிகாரம், குறள் - 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
பசி போக்கல் - புதுக்குறள்
பசித்தார் பசிபோக்கல் நோன்பில் புசிக்கா
பசிபொறுத் தாரினும் மேல்
உணவிருந்து முண்ணாது நோன்பிருத்த லன்றி
உணவிலார்க் கன்னமிடல் மேல்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
பசி போக்கல் - புதுக்குறள்
பசித்தார் பசிபோக்கல் நோன்பில் புசிக்கா
பசிபொறுத் தாரினும் மேல்
உணவிருந்து முண்ணாது நோன்பிருத்த லன்றி
உணவிலார்க் கன்னமிடல் மேல்
விருந்தோம்பல் - புதுக்குறள்
என் குரு திரு. அஷோக் சுப்ரமணியம் அவர்கள் தினமொரு திருக்குறளுக்கு உரையெழுதியும் அதற்கிணையான புதுக்குறளையும் எழுதி வருகிறார்கள். தமிழிலக்கியங்களின்பால் அவர் கொண்டுள்ள பற்றும் அவரின் வெண்பா எழுதும் திறனும் அவரை அறிந்தோர்க்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது இன்றைய குறள்:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
(குறள் 86: விருந்தோம்பல் அதிகாரம்)
அந்தக் குறளையும், அவரின் விளக்கத்தையும் படித்தவுடன் அதற்கிணையான ஒரு புதுக்குறள் எழுதத் தோன்றியது. அந்தக் குறள்:
விருந்தோம்பல் பண்பினைப் பேணுவோர் தாமே
விருந்தினராம் வானோர வர்க்கு
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
(குறள் 86: விருந்தோம்பல் அதிகாரம்)
அந்தக் குறளையும், அவரின் விளக்கத்தையும் படித்தவுடன் அதற்கிணையான ஒரு புதுக்குறள் எழுதத் தோன்றியது. அந்தக் குறள்:
விருந்தோம்பல் பண்பினைப் பேணுவோர் தாமே
விருந்தினராம் வானோர வர்க்கு
Subscribe to:
Comments (Atom)