Monday, January 30, 2012

புதுக்குறள் - 2

புதுக்குறள் - 2



அறிவால் பகைமை களைதலே அல்லால்
அரிவாள் பிடித்தல் அழிவு

அரிவாள் - Sickle - a weapon with a sharp blade
அறிவால் - Using intelligence

விளக்கம்


பகைமையை ஆயுதம் ஏந்தாமல் சாமர்த்தியமாக அறிவால் வெல்வதே சிறப்பு
Use intelligence to defeat enemies than violence (weapons).

புதுக்குறள் - 1

புதுக்குறள் - 1


தொடரல் கடினம் அனைவர்க்கும் அன்றி
தொடங்கல் மிகவும் எளிது

விளக்கம்:


ஒரு செயலைத் தொடங்குதல் சுலபம். ஆனால் தொடருதல் கடினம்.
Its easier to start anything but difficult to sustain.

Wednesday, January 18, 2012

வார இறுதி

வார இறுதி


பிறந்த நாளா, கொண்டாட்டம் வார இறுதியில்
பண்டிகையா, கொண்டாட்டம் வார இறுதியில்
வேண்டியவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற உறுதியில்
ஒரு வேளை இறந்தாலும் வார இறுதியில்
இறந்தால்தான் வந்திடுவார்களோ, தெரிந்தவர்களும் சடுதியில்
இல்லையேல் இருந்திடுமோ பூதவுடல் சவ விடுதியில்

தமிழன்

முன்னுரை

பல வருடங்களாகவே என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் குறித்த என் வேதனையை புதுக்கவிதையாக வடிக்க முயற்சித்திருக்கிறேன். இது புதுக்கவிதையா இல்லை உரை நடையா என்பதெனக்குத் தெரியாது. ஆனால் என் உணர்வுகளை எனக்குப் பிடித்த தமிழில் வடிக்க மட்டும் தெரியும். இதைப் படிக்கும்போது நகைச்சுவை நட்சத்திரம் விவேக் அவர்கள் படிப்பது போல் படித்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒலி வடிவம் கேட்க இங்கே சுட்டுக.

தமிழன்


வந்தாரை வாழ வைக்கிறவன் தமிழன்
இப்ப வந்து போன இடத்திலெல்லாம் அடி வாங்குறதும் தமிழன்
வளமாத்தான்யா ஓடுது காவிரி
தமிழன் தண்ணி கேட்டான்னா மட்டும் கை விரி
நெய்வேலியிலேருந்து எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்குறீங்க நிலக்கரி
அதைப்பத்தி கேட்டா அது மத்திய வளம், தண்ணீர் மாநில வளம் அப்படின்னு பேசியே தமிழன் முகத்தில பூசுறீங்களே நல்லா கரி
சேட்டா, பத்திரமா கட்டிக்கடா அ(ர)ணை
தமிழன் நயன் தாரா அமலா பாலுக்கு கோவில் கட்டுவான், அவனுக்கேதுடா சொரணை?
ஆஸ்திரேலியாவில ஒரு சிங்கை கொன்னுட்டா அர்த்த ராத்திரியில் ஃபோன் போடுவாரு டர்பன் சிங்
தினம் தினம் தமிழ் மீனவனை அடிச்சாலும் கொன்னாலும் எனக்கென்னான்னு இருக்குறதுல சிங் ஈஸ் கிங்
ஓகேனக்கல், சபரி மலை எல்லாமே இந்தியாவின் உடமை
தமிழன் அங்கேயெல்லாம் போறதுக்கு கூட பாதுகாப்பு கேட்கிற நெலமை ரொம்ப கொடுமை
இந்தியை வச்சு அரசியல் பண்ணினாரு தமிழ் ஐய்யா
தமிழனை காப்பாத்த வேண்டிய நேரத்துல கையை விரிச்சது சரியாய்யா?
கச்சத்தீவை மீட்பேன்னு வசனம் உட்டது அம்மா
காரியத்தில ஒண்ணும் இல்லை, எல்லாமே சும்மா
கப்பல் படையிலேயே சேராம ஒருத்தரு ஆயிட்டாரு கேப்டன்
கட்டிங்கை போட்டுட்டு கண்டபடி திட்டியே ஆயிட்டாரு டாப் டவுன்
உணர்வை மட்டுமே வச்சிருக்காரு வைகோ
அரசியல் செல்வாக்கு இல்லாததால டர்பன் சிங் சொல்வாரு “அரே யார் வைகோ, சும்மா போய்க்கோ”
அடிக்கடி தமிழன் உணர்ச்சிகளை தூண்டி விடற அல்லக்கை அரசியல்வாதிகள் கொஞ்சம் பேர் இருக்காங்க பாஸு
அவுங்க பேச்சை நம்பி ஏமாந்துடாதீங்க, அவனுங்கெல்லாம் சும்மா டம்மி பீஸூ
தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்
தலையில இடியே விழுந்தாலும் தூங்குவான்
எப்பவாவது தன் இனத்துக்காக ஏங்குவான்
உணர்ச்சி வசப்பட்டு தீக்குளிச்சு அவனையே நம்பி இருக்கிறவங்க உயிரை வாங்குவான்
இதையெல்லாம் எழுதி நான் பேச வரலைய்யா பிரிவினை
இந்த பதிவு கொஞ்சமாவது தூண்டுமா தூங்கிக்கிட்டிருக்கிற தமிழன் உணர்வினை?
இப்படி சொந்த நாட்டிலேயே பக்கத்து மாநிலத்து கிட்ட தொங்கறதுக்கு தமிழன் என்ன கையேந்தியா?
அதுக்குத்தான்யா வைகோ சொன்ன மாதிரி உருவாகணும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா

- உணர்வுள்ள தமிழன்

இணையச் சுதந்திரம்

இணையச் சுதந்திரம்


SOPA, PIPA இவ்விரண்டிற்கும் ஆப்பா(ய்)
மக்கள் எதிர்ப்பலை மேலிருப்போம் HOPE-A(ய்)
காங்கிரஸ் ஓட்டெடுப்பில் கிடைத்திடுமா நல்லதொரு தீர்ப்பா(ய்)?

அலைபேசி

அலைபேசி


வாகனத்தில் அவசியமா அலைபேசி?
எமவாகனத்தில் சென்றிடவா
நீ யோசி!

தொழில் நுட்பம்

தொழில் நுட்பம்


தொழில்நுட்ப வளர்ச்சிகளால்
சுருங்கியது உலகமும்
மனிதமும்!

உச்சரிப்பு

உச்சரிப்பு


உச்சரிப்பில் பிழைகளென அனுதினமும் ஆர்ப்பரிப்பு
பெற்றோர்களுக்கு ஆங்கிலத்திலும்
பிள்ளைகளுக்கு தமிழிலும்